What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
509
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி நான்கு

குஞ்சரியோடு இடம் விட்டு இடம் புலர்ந்து வாழ்ந்து வந்த ரீசனின் வாழ்வில் திருப்புமுனையாகி போனது மனைவியவள் கையில் கிடந்த அன்றைய நாளிதழின் முதல் பக்க செய்தித்தான்.

மகளை கற்பழிக்க முயன்ற வாலிபனோடு போராடிய தந்தை பலி. இதுதான் செய்தியின் தலைப்பு. இதைப் பார்த்த பின்தான் குஞ்சரி கட்டுக்கடங்கா எமோஷனல் கொண்டாள்.

வெறிப்பிடித்தவளாய் மாறி அவளையே காயப்படுத்திக் கொண்டாள். அன்றைய இரவு முழுதும் அவள் டேடியின் புராணம் பாடி தூங்கியும் போனாள்.

அன்றைய சம்பவங்களே ரீசனை வெகுவாக பாதித்தது. கணவனவனை தூங்க விடாது செய்தது.

ஒருக்கால் நம்பிராஜன் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் குஞ்சரியின் வாழ்க்கையோடு விளையாடிய கயவர்களை ஏதாவது செய்திருப்பார் என்று ரீசனோ நம்பி சிந்தித்திட ஆரம்பித்தான்.

அதனால்தான் என்னவோ முதல் முறை நடந்த சம்பவத்தையே தம்பதிகள் இருவரும் மாமனாரிடம் சொல்லிடாமல் மறைத்து விட்டனர். அப்பாவை இழக்க தயாராய் இல்லை என்று குஞ்சரி கேட்டதற்கு இணங்கி ரீசனும் அமைதி காத்து விட்டான்.

ஆனால், அவர் இல்லாது போக மகளவளோ அப்பா இருந்திருந்தால் என்ற ஒரு புள்ளியில் வந்து நிற்க காதலித்து மணமுடித்திருந்த மணாளனோ கையாலாகாதவனாய் உணர்ந்தான்.

குஞ்சரியை கற்பழித்தவர்கள் யாரென்று முன்னரே அறிந்திருந்தவன் அவர்களை ஏதும் செய்யாமல் விட்டு வைத்ததற்கான காரணம் ரீசனின் முட்டாள்தனம் எங்கே குஞ்சரியை அவனிடத்திலிருந்து பிரித்திடுமோ என்ற அச்சமே.

ஆப்ரேஷன் செய்து கொள்ள மாட்டேன் என்று வேதாளமாய் நிற்பவளை பக்கம் வைத்துக் கொண்டு சாகசங்கள் செய்து தலையை கொண்டு போய் பிரச்சனையில் சிக்க வைத்துக்கொள்ள குஞ்சரி புருஷனுக்கு விருப்பமில்லை.

ஆகவே, முதல் மூன்று மாதங்களுக்கு பின் தொடர்ந்தவர்களை அதற்கு பின்னர் ரீசன் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், குஞ்சரியின் அப்பா புராணமும் செய்தித்தாளின் சம்பவமும் ரீசனை கொஞ்சம் எக்ஸ்ட்ரா மெனெக்கெட வைத்தது.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஏறக்குறைய ஆறேழு கற்பழிப்பு சம்பவங்கள் குறுகிய காலகட்டத்திலேயே நடந்திருக்க, அதுவெல்லாம் உடல் ஊனமுற்றோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்தான் என்பது ரீசன் கண்டறிந்த ஷாக்கிங்கான உண்மையாகும்.

கற்பழிக்கப்பட்ட பெண்களின் பின்னணியை அலசி ஆராய்ந்திட அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் விஜயின் மருந்து கம்பெனி தயாரிக்கின்ற மருந்துகளை ஸ்பெஷலாக எடுத்துக் கொள்ளும் நோயாளிகளே என்ற மற்றொரு தகவலையும் கண்டுப்பிடித்தான் ரீசன்.

ஒருவழியாக கூட்டி கழித்து பார்த்து கணக்கிட, ரீசன் தெரிந்துக் கொண்டது யாதெனில் குறையுள்ள மற்றும் பாதுகாப்பு குறைவாக இருக்கின்ற பெண்கள்தான் விஜய் மற்றும் அவன் நண்பர்களின் பலியாடுகள்.

விஜய் அப்படியான பெண்களை முதலில் அடையாளங் கண்டு கொள்வான். பின் வெளிநாட்டிலிருக்கும் அவனின் நண்பர்களுக்கு தகவல் கொடுத்து வர வழைப்பான்.

ஐவரும் ஒன்றுக்கூடி சம்பந்தப்பட்ட வஞ்சியின் வீட்டுக்கு ஆளில்லா நேரம் பார்த்து சென்று பசியை தீர்த்து கொண்டு பின் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு கிளம்பிடுவர்.

இதுதான் அவர்களின் வழக்கமான கற்பழிப்பு ரூட்டின். இதை நன்றாய் படித்துக் கொண்ட ரீசனோ நீண்ட யோசனைக்கு பிறகு முடிவொன்றை எடுத்தான். அதுதான் அவன் குஞ்சரிக்கான நியாயமும் மற்ற பெண்களுக்கான தர்மமும்.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 144
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top