What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
509
அத்தியாயம் 44

மதியம் நடந்த கலவரத்தில் நிழலிகாவிற்கு டின்னரும் இறங்கவில்லை தூக்கமும் வரவில்லை.

விரனோ ஜிம் போய் விடியற்காலை வீடு திரும்பினான். இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் மது வாடை கொண்டான்.

வந்தவன் நித்திரைக் கொள்ளது கிடந்த காரிகையை அவன் வசமாக்கினான். வஞ்சியவளோ அசையாது அவன் இயங்க வெறுமனே கிடந்தாள் விருப்பமற்ற கலவியில் காதல் இல்லாது போக.

போதையென்னவோ ஆளனை பேதையவளிடம் பித்துக்கொள்ள வைக்க வாட்டியெடுத்தான் நங்கையவளை நாராய் கிழிக்காத குறையாய் முரட்டுத்தனம் கொண்டு.

விருப்பமுள்ளவன் தொட்ட போதும் அதை வன்புணர்வாகவே உணர்ந்தாள் உல்லியவள் அவனை தடுக்கவோ எதிர்த்து போராடிடவோ கூட தெம்பற்றவளாய் இருக்க.

ஆணவனோ வேலை முடிய மணவாட்டியவளை ஆரத்தழுவி துயில் கொண்டான் சண்டையை மறந்து அவள் நெஞ்சிலேயே.

சொன்னான் விரன் நிறுத்தாது மது நிஜத்தை வாந்தியெடுக்க.

''ஐ லவ் யூ நிழலிகா! ஐ லவ் யூ! சோரி! சோரி! சோரிடி!''

சத்தமில்லா அழுகை அருவி கொள்ள,

''வெறும் அஞ்சு மணி நேரம், இதுக்கே உன்னாலே நான் இல்லாமே தாக்கு புடிக்கே முடியலே, நீயெல்லாம் எப்பட்றா நான் இல்லாமே இருப்பே! அதுவும் இன்னோருத்தனுக்கு என்னே கட்டிக்கொடுத்திட்டு!''

என்றவளோ மெதுவாய் விசும்பி கோதினாள் அவன் தலை.

அசந்திருந்தவன் காதில் விழாத வார்த்தையோ நேரடியாய் போய் சேர்ந்தது ஆளனவன் நெஞ்சில்.

இரவு கடத்தி வைத்திருந்து உலகை சூரியன் கைக்கொள்ளும் நேரம் வர சின்ன டிக்கியின் அறை கதவை தட்டினார் ரேக்கா.

கதவை திறந்த மருமகளிடம் சொல்ல வேண்டியதை சொல்லி கிளம்பினார் அவர்.

நிழலிகாவோ கடை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து அன்றைய பொழுதை சீக்கிரமாக தொடங்கினாள்.

மணி ஏழாக துயில் கலைந்த விரனோ அதீத தலைவலி கொண்டான். ஆகவே, அன்றைய மோர்னிங் ஜோஜிங்கிற்கு லீவு விட்டவன், தலையோடு குளியலொன்றை போட்டு வந்தமர்ந்தான் டைனிங் டேபிளில்.

சின்ன டிக்கியோ அவனுக்கான இட்லியை கொண்டு வந்து தட்டில் வைக்க,

''அம்மா எங்கே?''

என்றவனோ தலையை இருக்கரங்களால் இறுக்கி பற்றியப்படி அமர்ந்திருந்தான் பொஞ்சாதியை ஏறெடுக்காது.

''சிரம்பானுக்கு போயிருக்காங்க, வட்டி வாங்கனவங்க பொண்ணு கல்யாணம். மத்தியானதுக்குள்ளே வந்திடுவாங்க.''

என்றவளோ அவன் தட்டில் புதினா துவையலையும் சட்னியையும் வைக்க,

''நீ சாப்பிட்டியா?''

என்றவனோ இப்போதும் அவள் முகம் பாராதே வினவினான்.

''இல்லே.''

''ஏன்?''

''பசிக்கலே, நீங்க சாப்பிடுங்க. நான் உங்களுக்கு காஃபி எடுத்திட்டு வறேன். தலைவலி கொஞ்சம் குறையும்.''

என்றவளோ அங்கிருந்து ஓட பார்க்க,

''இல்லே வேணாம்.''

என்றவனோ இட்லியை உண்ண ஆரம்பித்தான்.

பரவையவளோ அக்கறையாய் விசாரித்தவன் கையை பிடித்திழுத்து ரெண்டு வாய் ஊட்டி விடுவான் என்றெண்ணிட, அப்படியான காலமெல்லாம் மலையேறி விட்ட நிஜத்தை உணர்ந்து சிரித்துக் கொண்டாள் மனம் கலங்கி.

கிட்சனில் பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்தவள் சில அடிகள் வைத்து சாம்பாரை ரெண்டு கிண்டு கிண்டி விட்டு மீண்டும் வாஷ் பேஷன் நோக்கி தட்டை சோப்பு நுரையில் குளிப்பாட்டிட கண்ணேல்லாம் இருட்டிக் கொண்டு போனது சின்ன டிக்கிக்கு.

கையிலிருந்த பிளேட்டோடு சேர்த்து தடுமாறும் பொழுதில் பற்றிய இன்னும் சில பாத்திரங்களோடு மயக்கம் கொண்டு சரிந்தாள் தரையில் நிழலிகா.

விரனோ ஓடி வந்தான் இட்லியை பாதியில் விட்டு அடுக்களையில் சத்தம் கேட்க.

சின்ன டிக்கியோ கீழ் கேபினெட்டில் முதுகு ஒட்டியப்படி சரிந்தமர்ந்து மூச்சிரைப்பு கொண்டாள் அரை மயக்கம் விழிகளை மூடாது திறந்திருக்க வழி அமைத்து கொடுக்க.

''நீ ஓகே தானே?!''

என்ற விரனோ அவளை நெருங்காது தூரத்திலிருந்தே கேட்டான் நிழலிகாவின் பார்வையில் அவன் கருணையற்றவனாய் தெரிய வேண்டி.

விழிகள் கண்ணீர் சொரிய காதல் கொண்டு கரம் பிடித்தவனை வெறுமையான பார்வை பார்த்தவளோ தலையை லேசாய் ஆட்டி பதிலளித்தாள் ஆணவனின் கேள்விக்கு.

''பார்த்துக்கோ.''

என்றவனோ ஒத்தை வார்த்தையில் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

சின்ன டிக்கியோ போகின்றவனின் முதுகையே வெறித்தாள் வெறுமை சூழ்ந்த இதயம் கொண்டு விரன் அவளை மொத்தமாய் ஒதுக்கி ஒதுங்கி விட்டான் என்றெண்ணி.

டைனிங் டேபிளுக்கு போன விரனோ கிளாஸ் நீர் கொண்டு கையை கழுவி கலங்கிய கண்களோடு மனையிலிருந்து வெளியேறினான் மனம் பாரத்தை தாங்கிட முடியாது.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 44
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top