What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

Admin 1

Member
Joined
Sep 22, 2024
Messages
170
istockphoto-1144248362-612x612-1-150x150.jpg






முழுமுதற்றின் கணமெடுத்து,

கருணையின் கர்வமெடுத்து,

காதலான நின்வதனம் கொடுத்தானோ கஜமுகன்…

கௌமார அன்பெடுத்து,

சேயோனின் வனப்பெடுத்து,

பேரழகி நின்னழகு சபித்தானே முருகு அவன்…!

இலக்கியதின் நாரெடுத்து,

வெண்சங்கின் பாலெடுத்து,

குறிஞ்சியாய் நின்னிதழ் வடித்தானோ

நான்முகனவன்!

நீரில் ஜலித்தெடுத்து,

ராகத்தில் துதியெடுத்து,

வீணை நின்னிடையாக படைத்தாளோ சொன்மகளவள்!

பாற்கடல் அமுதெடுத்து,

செல்வத்தின் சீரெடுத்து,

லட்சண செழிப்புனை உருவாக்கினாளோ இலக்குமியவள்…!

போர்கண்ட வாளெடுத்து,

தேவலோக மழை தொடுத்து,

தங்க புணர்புழையுனக்கு விழைந்தானோ இந்திரனவன்…!

பசலையில் மேனிக்கொண்டு,

கிறக்கத்தில் மோகம்உண்டு,

கதறும் காமந்தனை வரமளித்தானோ மன்மதனவன்…!

மூவுலக நிறையெடுத்து,

தர்மத்தின் தரமெடுத்து,

மிடுக்கான திமிர்உனக்கு தந்தானோ திருமாலவன்!

பதிவிரதை கற்பெடுத்து,

சிவத்தின் பாதியெடுத்து,

வலிமையிலான தலைகனம் உனக்கு அளித்தாளோ அந்திரியவள்…!

பிரணவ ஓமெடுத்து,

ஐவித பணியெடுத்து,

ஆங்கார அகம்பாவம் உனக்கு அருளினானோ ஈசனவன்…!

காரிருள் நிலவொதுக்கி,

ஈரத்தில் உயிர் உருக்கி,

மூச்சாகி போனானோ உன் சர்வேஷ் இவன்…!
 

Author: Admin 1
Article Title: படாஸ் ❣️ 22
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top