What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 68


கடவுளால் படைக்கப்பட்ட ஆறறிவு உயிர்கள் அனைத்தும் ரத்தமும் சதையும் கொண்ட ஜீவன்களே.

கேய், லேஸ்பியன், ட்ரான்ஸ்ஜெண்டர் மற்றும் பைசெக்ஸுவல் போன்ற அனைவரும் பாலினத்தால் வேறுபட்டிருக்கும் மனிதர்களே ஒழிய உணர்வுகளால் அல்ல.

இரு கைகால்கள் தொடங்கி, பேச ஒரு வாயும், சுவாசிக்க நாசியும், சந்ததியை வளர்க்க உடல் உறுப்புகளையும் வழங்கிய கடவுள், இதயத்தையும் அது சார்ந்த உணர்சிகளையும் கூட அனைவருக்கும் சமமாகவே கொடுத்திருக்கிறான்.

இருப்பினும், ஏன் மானிடனுக்கு மட்டும் பரஸ்பரம் கசக்கிறதென்று தெரியவில்லை, ஒன்றை ஏற்றுக் கொள்வதிலும் அதோடு சேர்ந்து பயணிப்பதிலும்.

எவ்வளவு நேரம் அழுதாள் என்றே தெரியவில்லை சின்ன டிக்கியவள். கோபமும் வெறுப்பும் ஒருசேர மங்கையின் மனதை துளைத்தெடுத்திருந்தது அரங்கேறியிருந்த சம்பவங்கள் அனைத்தும்.

''பார்த்தியாடா குட்டி, அவன் உங்கப்பாவே எப்படியெல்லாம் வர்ணிக்கறான்னு! நான் கூட என் அத்தானே அப்படி ரசிச்சதில்லடா! ஆனா, அவன் என்னான்னா, விட்டா என் விரனுக்கு சிலையே வைப்பான் போலே! ச்சை!''

என்ற ஒப்பாரியின் ஊடே மூக்கை சிந்தி ஓரம் போட்டவளோ,

''அவன் பேசறே பேச்சுக்கு கண்டிப்பா அவன்தான் என் விரன் மனசே கலைச்சிருக்கணும்! என் விரன் நல்லவன்! சொக்க தங்கம்! அவனா எதுவும் பண்ணிருக்க மாட்டான்! சீ! இல்லே! போயிருக்க மாட்டான் நதானியேல் கூப்பிட்டு! அவனாவேதான் கையே புடிச்சு இழுத்திட்டு போய் என் விரனே ரேப் பண்ணிருப்பான்!''

என்றவளோ கண்ணீர் கொண்டு உருண்டை தலையணையை கட்டிக்கொண்டாள்.

நிழலிகாவை பொறுத்தமட்டில் அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவளின் அப்பா, அடுத்ததாய் விரன், மருதாணி கடை, விரனின் ஜிம், பூஜை அறை, இன்ஸ்டாகிராம், மாமியார் வீடு, குர்ஜஸ் தாத்தா கடைசியாய் அட்சரன். இதுதான் அவளின் உலகம்.

வேறெதை பற்றியும் பாவையவளுக்கு தெரியாது. தெரிந்துக் கொள்ளவும் அவள் விருப்பப்படவில்லை. இருப்பதைக் கொண்டு நிம்மதி கொள்ளும் மடந்தையவள்.

காலையில் எழுந்து, குளித்து, உண்டு, பூஜை முடித்து, கடைக்கு போய் பிழைப்பை பார்த்து, நேரமாக கடை சாத்தி, வீடு திரும்பி, குளித்து, உண்டு, கலவி கொண்டு நல்லுறக்கம் கொள்வது மட்டுமே சின்ன டிக்கியின் அன்றாட செயல்கள்.

இப்படியான வாழ்க்கையில் அவள் ஒருநாளும் சலிப்பு கொண்டதேயில்லை, மாயோளின் எல்லாவற்றிலும் விரன் என்றொருவன் இருக்க.

''அப்படி என்னடா பண்ணிட்டான் அவன் உனக்கு! அவன்கூட போய்! ச்சை! நான் உன்னே சந்தோஷமா வெச்சுக்கலையாடா குட்டி குஞ்சா! ஏன்டா போயும் போயும் ஒரு ஆம்பளைக்கிட்டே போய் இப்படி செக்ஸ் வெச்சுக்கிட்டே! நான் என்னடா பண்ணலே உனக்கு! எல்லாமே பண்ணேனே!''

என்றவளோ தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்.

''எத்தனை தடவே நீ என்னே, நான் அலைஞ்சிக்கிட்டு வறேன்னு சொல்லி கிண்டல் பண்ணிருப்பே! என்னைக்காவது ஒருநாள் நான் உன்கிட்டே இதுக்காக சண்டை போட்ருக்கேனா?!''

என்றவளோ முகத்தை மூடிக்கொண்டாள் தலையணையில் தலை சாய்த்து.

''ஏன், அவ்ளோ! கோச்சுக்கிட்டு நீ தொட்டா வேணா சொல்லிருக்கேனா?! தொடாதன்னு தள்ளி படுத்திருக்கேனா?!''

என்றவளோ மெத்தை விரிப்பை கைகளால் பற்றி மூக்குச்சளி ஒழுக கதறினாள்.

''டோகி வலிச்சாலும் உனக்காக நான் தாங்கிக்கிட்டேந்தானடா குஞ்சா! அப்பறம் ஏன்டா இப்படி பண்ணே!''

என்றவளோ நெஞ்சுக்குழிக்குள் குத்தி நின்ற தாலி சரடை வெளியில் எடுத்து விட்டு குலுங்கினாள் அழுகையில் குளித்தவளாய்.

''நீ கீழே போனா மறுநாள் என்னால சரியா யூரின் கூட போக முடியாதுடா குஞ்சா! எரிச்சல்லே செத்துடலாம் போலிருக்கும்! ஆனா, நான் வேணா பண்ணதான்னு என்னைக்காவது சொல்லிருக்கேனா உன்கிட்டே!''

என்றவளோ வீங்கிய விழிப்படலங்களின் கண்ணீரை வஞ்சனையின்றி வழிய விட்டு எழுந்தமர்ந்தாள் மூச்சு முட்ட விடாது அழுவதால்.

''உனக்கு புடிச்ச அத்தனைக்கும் நான் ஓகேதானே சொல்லிருக்கேன்! என்னே நீ விருப்பமில்லாமே தொட்டப்பக்கூட நான் உன்னே ஒதுக்கலையேடா! காலே விரிச்சுத்தானே கொடுத்தேன்! மாராப்பே விலகித்தானே படுத்தேன்!''

என்றவளின் வார்த்தைகளை போலவே கட்டில் விளிம்பில் பிடிக்கொண்டிருந்த பூமகளின் பிடியிலும் வலுவில்லை.

''எத்தனையோ பொம்பளைங்க செய்ய கூச்சப்படறே, வேணான்னு சொல்றே ப்ளோவ்ஜோப்பே கூட நான் வெட்கப்படாமே செஞ்சேனேடா! அப்பறம் ஏன்டா எனக்கு இப்படி ஒரு துரோகத்தை நீ பண்ணே!''

என்றவளின் ஊமை விழிகளோ தரையில் துளிர்த்து கொட்டின கோதையின் கண்ணீரை.

''செம்மையா பண்றேன்னு சொல்லுவியேடா, என்னே விடவா அவன் சூப்பரா பண்ணிட்டான்?! அதான், தப்பு நடந்து போச்சாடா குஞ்சா!''

என்றவளோ முகத்தை மூடிக்கொண்டாள் சத்தமில்லா அழுகை கொண்டு.

''எப்படிடா இதை போய் நான் நாலு பேர்கிட்ட சொல்லுவேன்! எல்லாம் காரி மூஞ்சிலே துப்பே மாட்டாங்களா! எங்க போய்டா குட்டி குஞ்சா இந்த அசிங்கத்தே கழுவறது!''

என்றவளோ வயிற்றை பிடித்து கொண்டு தேம்பினாள் உடம்பில் தெம்பில்லாது போக.

''நீ மோசண்டா குட்டி குஞ்சா! ரொம்ப வலிக்குதுடா எனக்கு! என்னாலே தாங்கிக்கவே முடியலடா குஞ்சா! ஏண்டா எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணே நீ! என் எண்ணத்துலே கூட வேறே ஒருத்தன் இல்லையடா! ஆனா, இன்னைக்கு உன்னே பங்குபோட ஒருத்தன் போட்டியா வந்துட்டானேடா!''

என்றவளோ பைத்தியம் பிடித்தவளை போல் அலறி அறையை தும்சமாக்கினாள்.

உண்மையை சொல்ல போனால், நிழலிகா இப்போதைக்கு ஆதீத மன உளைச்சலுடன் கூடிய குழப்பத்தில் இருக்கிறாள். போதாக்குறைக்கு அவளின் தாய்மை கொண்ட புத்தி வேறு அவளுக்குள் கலக்கத்தை கிளப்பி விட்டு சகுனி வேலை பார்த்தது.

அச்சங்கொண்டாள் மாதவள் எங்கே விரன் அவளையும் குழந்தையையும் தனியே விட்டு போயிடுவானோ என்று. அவன் போக கூடாதென்பதற்காகத்தான் கிறுக்குத்தனமான ஒப்பந்தம் ஒன்றையே அவனோடு கொண்டாள் அளகவள்.

நதானியேலை சந்தித்த பிறகே, ஆணவன் புருஷனை பிரித்துக் கூட்டி போயிடுவானோ என்ற பயம் பெண்டு அவளுக்குள் ஆணித்தரமாக வேரூன்றி விட்டது.

நதானியேலை நேரடியாக பார்த்து பேசும் வரை விரனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த தனு அவள், ஆடிப்போனாள் ஹார்ட் அட்டாக் வராத குறையாய் நடிகனவன் கணவனின்பால் கொண்டிருக்கும் உறவை சொல்லாமல் சொல்ல.

ஈரக்குலை நடுங்கி அடிவயிறு கலக்கியது செய்யிழைக்கு எங்கே விரன் காதலையும் காதலித்து கரம் பிடித்த காதல் வல்லபியையும் கழட்டி விட்டு அவன் பின்னாடி போயிடுவானோ என்று.

இவளை போ, போவென்று விரட்டியவன் எங்கே அவன் போயிடுவானோ என்று விகுருதி அவளை பாடாய் படுத்தியது.

கண்டதையும் யோசித்து அழுது புரண்டவளுக்கு பைசெக்ஸுவல் என்றால் நிஜத்தில் என்னெவென்றே புரியவேயில்லை. அதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் அறிவோ பொறுமையோ கூட மானினியவளுக்கு இல்லை.

ஆணொருவன் எப்படி ஒரு பெண்ணிடத்தில் எல்லை மீறிடுவானோ அதுபோலத்தான் பார்த்தால் வதூ அவள் விரனின் செயலை நதானியேலுடன். அவ்வளவே அந்திகையின் புரிதல்.

கிஃப்ட் பாக்ஸ் பற்றி அவள் தெரிந்துக் கொள்ள எடுத்த அத்தனை முயற்சியும் சாதாரணமாய் எல்லா மனைவிகளுக்கும் இருக்கின்ற ஆதங்கமே தவிரே வேறெதுவும் இல்லை.

பக்கமிருப்பவளுக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கென்ற பொறாமையும் இதில் அடங்கும். அதுவும் குடும்பம் நடத்தும் புருஷனுக்கு டஜன் ஜட்டிகள் பார்சலில் வந்தால் எந்த பெண்டாட்டித்தான் சிரித்துக் கொண்டிருப்பாள்.

நம்பிக்கை தும்பிக்கையெல்லாம் இப்படியான சூழ்நிலைகளில் பல்டியடிப்பது மிக சாதாரணமே.

அவளுக்கு சொந்தமான விரனின் உடலை சொந்தங்கொண்டாடிய துரோகனை காணவே முயற்சித்தாள் நிழலிகா. அதில் வெற்றியும் பெற்றாள் காய்களை புத்திசாலித்தனமாய் நகர்த்தி.

இருந்தும், இப்போது மொத்த நிம்மதியையும் இழந்து நிற்கிறாள் உண்மை கசக்க அதை ஜீரணிக்க முடியாததால்.

உயிர் துஞ்சிடுவான் விரன்

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 68
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top