What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் நூற்றி ஆறு

சாதாரண இறப்பென்றாலே கூறு போட சொல்லும் போலீஸ், கொலை வழக்கை சும்மாவா விடும். குத்திக் குதறியெடுத்து விட்டார்கள் ரீசனின் உடலை போஸ்ட் மார்ட்டம் என்ற பெயரில்.

குஞ்சரி எவ்வளவோ கெஞ்சினாள் கதறினாள். அவன் வலி தாங்க மாட்டான் என்றாள். ஆனால், நிஜத்தில் மரணித்தவனுக்கு உணர்ச்சிகள் விட்டு போயிருக்க உயிரோடு இருந்த தேவகுஞ்சரிக்கே புருஷனின் தேகத்தில் கத்தி பட உயிர் போனது.

கீரன் கையில் கேஸ் போனதும் செத்தவன் கொன்னவன் என்ற கணக்கில் குஞ்சரி, விசா மற்றும் ப்ரீதன் மூவரும் பாதிக்கப்பட்டவர்களாகவும் ரீசன் தீயவர்களைக் கொன்று உயிர்விட்ட கொலைகாரனாகவும் ஆகிப்போனான்.

சின்ன குட்டி கீத்துவின் வாக்குமூலத்தில் ரீசன் மகளின் கண்களுக்கு ஹீரோ என்றாலும் மற்றவர்களின் பார்வைக்கு அவன் உயிரோடு இருந்திருந்தாலும் தூக்கு கயிறுக்குதான் வாக்கப்பட்டிருப்பான் நால்வரை கொன்ற குற்றத்துக்காய்.

கிரிமினல் வழக்கென்பதால் மீகன் களமிறங்க மற்றவர்கள் அனைவரும் போலீஸ் கண்காணிப்பில் வெளிநாடு செல்ல முடியா நிலைக்கு தள்ளப்பட்டனர் கேஸ் முடியும் வரை என்னதான் தீர்ப்பு அவர்களுக்கு சாதமாக இருந்தாலுமே.

சுவர் கடிகாரம் ஓசையெழுப்பியது மணி விடியற்காலை ஒன்றுக்கு. இன்னமும் குஞ்சரி வீல் சேரில் அமர்ந்தபடி ரீசனின் படத்தையேதான் இமைக்காது பார்த்திருந்தாள்.

அருவியாய் கண்ணீர் பெருக்கெடுத்து ஆடையெல்லாம் ஈரமாகியிருந்தது அருணியவளுக்கு. இருபது நாட்களுக்கு முன் இதே நள்ளிரவு ஒன்றுக்கு ரீசனின் இதழ்கள் குஞ்சரியின் மேனியில் மூன்று வருடங்களுக்குப் பிறகு உலா வந்தது.

அம்முயங்கலின் ஆதாரமாய் போய் சேர்ந்தவனின் கழுத்து, ஷோல்டர், நெஞ்சு என்று ஆங்காங்கே குஞ்சரியின் ஆசையான லவ் பைட்ஸ் அப்படியே இருந்தது மரித்தவனின் தேகத்தில்.

ஏன், தேவகுஞ்சரியும் கூட கேட்டே வாங்கிக் கொண்டாள் அழுத்தமான கன்றிப் போகும் பற்தடங்களை அவளின் வலிக்காத பாகங்களில். பேதையின் மேனி பைட்ஸ் எல்லாம்

ரீசனை போலவே குஞ்சரியை விட்டு போக ஆரம்பித்திருந்தன.

என்னதான் தாலியை எந்நேரமும் அணிந்து கொள்ளாதவளாய் இருப்பினும் ரீசன் போய் சேர்ந்த நேரத்தில் தன்னிச்சையாக அதை உள்ளங்கைக்குள் ஒளித்து பற்றிக் கொண்டாள் கெட்டியாய் யாராவது வந்து கழட்டி போய் விடுவார்களோ என்ற பயத்தில்.

ஏற்கனவே, நடைபிணமாகிவிட்ட மருமகளை மேலும் சாகடிக்க விரும்பாத வாத்தியாரோ தாலி சடங்கேதும் செய்திட வேண்டாமென்று கேட்டுக் கொண்டார் பூசாரியிடம்.

ஆகவே, பொஞ்சாதியவள் கத்திக் கதறி ஒப்பாரி வைத்ததெல்லாம் ரீசனின் பூத உடலை வீட்டுக் கொண்டு வந்து சடங்குகள் செய்த அந்த ஒரு மணி நேரம் மட்டுமே.

அப்பனுக்கு கொள்ளி போடும் ஆள் யாரென்று பூசாரி தேட வாத்தியார் வாய் திறக்கும் முன் ப்ரீதன் மொழிந்தான் அவன் பெயரை காரணமாகவே.

கீரனோ இழுத்து வந்த குட்டி தினாவை மீண்டும் விசாவிடத்திலேயே ஒப்படைத்தான் ப்ரீதன் அவன் செயலால் போலீஸ்காரனுக்கு பதிலளிக்க.

இடுகாட்டுக்கு மற்றவர்களோடு செல்ல வேண்டுமென்று கெஞ்சி கூத்தாடிய குஞ்சரியோ துணையற்று வீல் சேரிலிருந்து கீழே விழுந்தாள் எல்லோரும் போகின்ற ஊர்தியின் பின்னால் போக அவளை தனியாய் தவிக்க விட்டு.

குஞ்சரியின் கச்சேரி சுடுகாட்டை ரெண்டாக்கும் என்ற மீகனோ தடுத்தான் வீர்ரை மானினியவளை அங்கே கூட்டி போக வேண்டாமென்று.

ஆனால், லல்லி புருஷனோ ஒருக்கால் ரீசன் சாம்பலாவதை கண் கூடாய் பார்த்தால் கொஞ்சமேனும் நிதர்சனம் உணர்வாள் குஞ்சரி என்றான்.

வாதத்தில் ஜெயித்ததென்னவோ மீகன்தான். இடுகாட்டில் குஞ்சரியைக் கட்டுப்படுத்த முடியாத வீர்ரோ அவளை காருக்குள் வைத்து பூட்டினான்.

ரீசனின் உடல் நூதனமாய் எரியூட்டப்படுவதை கார் ஜன்னல் வழி கண்ட காரிகையோ உள்ளங்கைகள் பழுத்துப் போகும் வரை ஜன்னலை விடாது அடித்து உயிர் போகும் படியான ஒப்பாரியைக் கொண்டு இறுதியில் மயங்கி விழுந்தாள் காருக்குள்ளேயே.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 106
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top