What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உயிர் துஞ்சும் விரனா: 3

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 3

எல்லாம் முடிய விரனின் நெஞ்சில் துஞ்சி கிடந்தவளோ அவனின் ஈரமான கேசத்தை கைகளால் கோதி,

''தலை ஈரமா இருக்குடா குட்டி குஞ்சா.. வா.. நான் குளிப்பாட்டி விடறேன்.. இல்லன்னா காய்ச்சல் வந்து நல்லா சளி பிடிச்சிக்கும்..''

என்றிட,

''அதெல்லாம் ஒன்னும் வேணா.. நானே குளிச்சிப்பேன்..''

என்று குரலில் கொஞ்சம் காட்டம் கொண்டு மனைவியவளை அவன் நெஞ்சிலிருந்து மஞ்சத்தில் தள்ளி விட்டான் விரன் வேண்டா வெறுப்பாக.

''குட்டி குஞ்சா என்னாச்சு.. ஏன் இப்போ கோவமா பேசறே.. என்னே ஏன் தள்ளி விடறே..''

என்றவளின் கண்கள் சட்டென குளமாக,

''ஏய்.. சின்ன டிக்கி..''

என்று பதறி நெருங்கியவனோ பின் முகத்தை இறுக்கமாக்கி கொண்டு விலகினான் விறலியவளை காரணமாய்.

''என்னாச்சு குட்டி குஞ்சா.. எங்க போறே..''

என்றவளோ குழந்தையாய் வேள்வி கொண்டாள் முட்டிக் கொண்டு நிற்கும் அழுகுரலில்,

''அது எதுக்கு உனக்கு!''

என்றவனோ அலமாரிக்குள்ளிருந்து புது ஆடைகளை எடுத்து அணிந்துக் கொண்டான், ஷவருக்கு லீவு விட்டு.

''இப்போ என்னாச்சுன்னு சத்தம் போடறே குட்டி குஞ்சா.. நான் உன் பொண்டாட்டிடா!! நான் கேட்காமே வேறே யார் கேட்ப்பா!!''

என்றவளோ கூந்தலை அள்ளி முடிந்திட,

''அதெல்லாம் இனி நீ கேட்க வேண்டாம்!!''

என்றவனோ முகத்தை கழுவிக் கொண்டு வந்தான் குளியலறலையிலிருந்து வெளியே.

''அப்போ வேறே யார் கேட்ப்பா!!''

என்றவளோ சின்னதாய் கோபம் கொள்ள,

''கேட்க வேண்டியவங்க..''

என்றவனோ முகத்தை துடைத்துக் கொள்ள,

''அவுங்க யாரு!!''

என்றவளோ கார் சாவியை எடுத்தவனின் கையை பற்றியிழுத்து நிறுத்தினாள்.

''இனி இந்த கட்டிலுக்கும் எனக்கும் சொந்தமானவங்க!!''

என்றவனோ சின்ன டிக்கியவளை கண்களால் விழுங்கி சொன்னான் சுந்தரியவள் கையை உதறி.

''என்னே!! என்னே சொன்னே!!''

அதிர்ச்சிக் கொண்டு அதிர்ந்தாள் சின்ன டிக்கியவள் அவளின் குட்டி குஞ்சன் மனசை சில்லாய் உடைக்கும் வார்த்தைகளை உதிர்க்க.

''ஏன் உனக்கு காது விளங்காதா!! ஒருதடவைதான் என்னாலே சொல்ல முடியும்!! மறுபடியும் சொல்ல எனக்கு விருப்பமில்லே!! நீயே ரிக்கோல் பண்ணிக்கோ!!''

என்றவனோ கடுகடுக்க,

''விளையாடாத குட்டி குஞ்சா!! என்னே கோவம் உனக்கு என் மேலே!! வேணுன்னா ரெண்டடி அடிச்சிடு!! ஆனா இப்படியெல்லாம் பேசி என்னே கஷ்டப்படுத்தாதே!!அதுவும் ஜிம்மடிச்சே பிறகு..''

என்றவளோ அழுதே விட்டாள் கடிகாரத்தை மணிக்கட்டில் இறுக்கியவன் கொண்ட வெறுப்பு புரியாது.

''இந்த நீலிக்கண்ணீரே நிறுத்து முதல்லே! சகிக்கலே!! புடிக்கலே!!''

என்றவனோ அறையிலிருந்து வெளியேற,

''என்னே புடிக்கலே இப்போ உனக்கு!! குட்டி குஞ்சா சொல்லுடா!! நில்லு எங்க போறே!!''

என்றவளோ டவலை நெஞ்சோடு இறுக்கி போர்வையை மேலே போர்த்திக் கொண்டு அவனை துரத்தி போனாள் மாடிப்படியில்.

''உன்னே புடிக்கலே!!''

என்றவனின் ஆக்ரோஷமான அலறலில் ஈரக்குலை நடுங்கி ஒடுங்கியது விரன் கட்டிய தாலி ஆபரணமில்லா அந்திகையின் கழுத்தில் டவலுக்கு வெளியே சிரித்திருக்க.

''என்.. என்னையவா!!''

என்றவளோ கண்ணீர் கொண்ட விழிகளோடு படிக்கட்டின் ஓரத்து விளிம்பை பற்றி ஸ்தம்பிப்போடு திக்கினாள் அதிர்ச்சி ஹார்ட் அட்டாக் கொடுக்க.

''ஆமா!! உன்னத்தான் புடிக்கலே!!''

கர்ஜித்தான் அவிரன் ஆளில்லா மனையில் மீண்டும் ஒருமுறை.

''நான்.. நான் என்னே பண்ணேன் குட்டி குஞ்சா.. ஏன் என்னே புடிக்கலே உனக்கு..''

என்றவளோ தேம்பினாள் மனசுக்குள் அவன் கிண்டல்தான் அடித்திட வேண்டுமென்று பிராத்தித்து.

''ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள்!! அவ்ளோதான்!!''

என்றவனோ தடதடவென படியில் இறங்கிட,

''நாமே வாழ ஆரம்பிச்சே இப்போதானே மூனு மாசம் குட்டி குஞ்சா..''

ஞாபகப்படுத்தினாள் சின்ன டிக்கியவள் கணவனுக்கு அவர்களின் கலவியிலான காதல் ஆரம்பித்தே இப்போதுதான் மாதகணக்கென்று.

''தேவையில்லாமே பேசி என்னே கடுப்பாக்காதே!! ரூம் ஷிஃப்ட் பண்ணிக்கோ!! இனி நான் உன்னே என் ரூம்லே பார்க்க கூடாது!!''

கறாராய் சொன்னவன் படியில் இறங்கிட,

''போன்னா நான் எங்கே போக!!''

என்றவளோ அவனை வழி மறைத்தாள்.

''எங்க வேணா போ!! ஏன் நடு ரோட்டுக்கு கூட போ!! ஆனா.. இனி என் ரூம்லே நான் உன்னே பார்க்க கூடாது!!''

என்றவனோ வஞ்சியவள் முகம் நெருங்கி தணல் கொண்ட கதம் ஆர்ப்பரிக்க விழிகளால் மிரட்டி குரலால் எச்சரித்து அங்கிருந்து நகர்ந்தான் விருட்டென்று.

நிழலிகாவோ சற்று நேரத்துக்கு முன் என்ன நடந்தது என்று யோசித்து தலை சுற்றலோடு அழுகை பீறிட அப்படியே படிக்கட்டினில் அமர்ந்தாள் ஆயந்தியின் பெண்மையோ உள்வாங்கிய விரனின் உயிர்களை மெதுவாய் கரை தட்டிட வைக்க.

உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய பாகங்களை படிக்க:


 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 3
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top