Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170

எனை நெருங்கும் ஒவ்வொருத்தியும் ஏதோ ஒரு விதத்தில் காயம்பட்டே போகிறாள்கள்!
தவறென்று ஏதுமில்லை.
சரியென்றும் எதுவுமில்லை.
குற்ற உணர்ச்சி கொண்டு கலங்கி போவதெல்லாம் அவள்கள்தான்!
மொத்த பழியையும் ஏற்றுக் கொள்வது நான்தான்!
ஊரோடு ஒட்டாது தனித்திருப்பதும் இதனால்தான்!
கேடி எழுத ஆரம்பித்தால் நில்லா பெரும் மழைதான்!
மீண்டும் சொல்கிறேன்!
அழகிய ராட்சசிகளே!
அதிரூப ரட்சகிகளே!
நெருங்கி உடைந்து போகாதீர்கள்!
கேடி எழுத படியுங்கள்!
அவனை படித்திட ஒருபோதும் எண்ணாதீர்கள்!
காரணம்..
பலவீனப்பட்டு போவதென்னவோ ஆழங்கொண்ட மனதே!
பக்குவமாய் நானிருந்தாலும்..
அடி சறுக்கிடத்தான் செய்கிறேன்..
எனையறியா நேரங்களில்..
என்னுள்ளம் விரும்பியவள்கள் தன்னிச்சையாய் தரிசனம் தர!
'கள்' களுக்கு கணக்கு கேட்டிடாதீர்களடி!
அவள்களில் நீங்களும் ஒருத்தியடி!
சொல்லால் அடித்தவள்!
உணர்வால் வதைத்தவள்!
மனதால் பிரிந்தவள்!
சிரிப்பைத் திருடி போனவள்!
சில்மிஷம் காண மறுத்தவள்!
அடுக்கிடலாம்!
சந்தேகம் முற்றாய் அவள்களை பிரித்து கூட்டி போயிடும்!
இருந்தும்!
மேலிருந்து படியுங்கள்!
Author: Admin 1
Article Title: கேடி எழுத ஆரம்பித்தால்...
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கேடி எழுத ஆரம்பித்தால்...
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.