What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

tamil_poems

  1. Admin 1

    சாபம்

    அவள் ஒளியை அவள் பிரகாசத்தை அவள் பெண்ணம்சத்தை மரியாதை செய்யும் ஆண்மனத்தினைக் காட்டிலும் எவன் வாள்கொண்டு கீறுவானோ எவன் பிரியத்தின் குருதியைப் பருகுவானோ அவனிடமே அன்புக்கு இரந்து நிற்பதுவே காலங்களாய் பெண் கொண்ட சாபம்
  2. Admin 1

    கைக்கொள்ளா பிழை

    நீ என் கைக்கொள்ளா பிழை..
  3. Admin 1

    உன்னிடம் கேட்பேன்

    உன்னை உன்னிடம் கேட்பேன் ஏழு முறையல்ல எழுபது முறையல்ல எல்லா முறையிலும் உன்னை உன்னிடம் கேட்பேன் மண்டியிடுவேன் மன்றாடுவேன் துளி நீரும் பருகாமல் மறுகியுலர்வேன் மரிக்கும் கணத்திலும் உன்னை உன்னிடம் கேட்பேன் கடவுளிடம் கூட அல்ல…
  4. Admin 1

    பெயரிடு கண்மணி

    உன்னோடு நேரம் போக்க உன் அண்மையில் இருக்க உன் தோளுரச உன் பாதம் பற்ற உன் விரிந்த நெற்றியில் அன்பின் முத்தம் பகிர உன்னுடல் வெப்பம் உணர உன் பெண்மையின் நடுக்கம் காண நீ பூசிக்கொள்ளும் வெட்கம் தொட உன்னோடு சேர்ந்து நிலா பார்க்க மழையில் நனைய பயணம் செல்ல இலக்கற்ற பாதையில் முடிவே இன்றி நடந்து...
  5. Admin 1

    நீ போதும்

    நிறைய காதல்களும் நிறைய காமங்களும் எளிதில் எட்டும் நிலைதனில் எனக்கு உன்னை மட்டும்தான் பிடித்திருக்கிறது என்பதற்கு நான் அத்தனை யோக்கியன் என்றர்த்தமல்ல எனக்கும் என் மீத வாழ்விற்கும் நீ போதும் என்றர்த்தம்!
  6. Admin 1

    கேளாய் தேவி

    கேளாய் தேவி நின் தேகம் தொடத் திறந்துகொள்ளத் தயார்நிலையில் தாழ் விலக்கப்பட்டு நான் அறிந்துகொள்ளவே காத்திருக்கும் என்ப்ரிய மர்மம்!
  7. Admin 1

    மன்னிப்பு

    பிழையுணர்ந்து மன்னிப்பு கேட்க நாடி வரும் உன்னை தவிர்த்தபடி புரிந்துகொள்ளாததாக நடிப்பதின் வழி ப்ரியங்களை நிராகரிப்பதின் ப்ரியங்களை வலிசெய்வதின் போதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் மன்னித்து விடு அன்பின் மனக்குரூரங்கள் அளப்பரியது கண்மணி!
  8. Admin 1

    குல்லி மட்டா?!

    இப்படி நடக்குமென்று யாரும் நினைக்கவில்லை. ஆனால், மனித உயிரானது என்றாவது ஒருநாள் இப்புவியை விட்டு போய்தான் ஆகவேண்டும். துக்கம் நடந்ததை நான் அறியவில்லை. மூன்றாவது எழுத்தாளிணி சொல்ல அறிந்தேன். விரைந்தேன் சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பார்த்திட. அதிர்ந்தேன் கண்ட பதிவுகளில்...
  9. Admin 1

    பினாத்தல்

    கேடி என்று பினாத்திய வாயெல்லாம்.. நிமல் பெயர் மறந்திருக்க.. கேடியே யாரோ போல் ஒதுங்கிருக்க.. சுஜியோ தன்னிலை துறந்திருக்க.. சதியோ தனிமையில் அழுதிருக்க… காலமோ நிர்மலனை நிர்காதியாக்கி சிரித்தது..
  10. Admin 1

    மித்திலாவின் கீரனுக்கு ❤❤

    கீரன் ஆரழகன் 😍 அரக்கனெல்லாம் அழகானது ஏனோ🙈 ஆட்கொள்ளும் ஆரழகன் தானே😘 ராவணனின் சரி பாதி தானோ 😚 என் கீரனின் மித்திலா நானோ 😆😬 ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் ராவணா ❤
  11. Admin 1

    அசகாய‌ பேரழகு🥰8

    நிறைகள் எல்லாம் குறையாகக் காணப்பட்டன பிடித்தன எல்லாம் பிடிக்காததாய் மாறின அதிக நம்பிக்கை துரோகத்தைப் பரிசளித்தது ஆழமான காதல் புதைக்குழியில் சமாதியானது! நம்பிக்கை உடைந்து ஏமாற்றமாகியது ஏமாற்றங்கள் கூடி விரக்தியளித்தது! காயத்திற்கு மருந்தில்லை உறவுகள் அனைத்தும் இழந்தேன்! பழைய காதல்...
  12. Admin 1

    அசகாய‌ பேரழகு🥰7

    பாதைகளற்று பயணப்படும் பறவையினம் நான்.. பார்வைகள்தோறும் வேறுபடும் பாவையினம் தான்.. புரியாதவரை உன்னில் நான் புதிர்த்தோட்டம்தான்.. பருவ வேலியால் நம் பாதைகள் இணைந்தபோது இரவுகளுக்கு வியர்க்க துவங்குகின்றன.. பசித்த பொழுதுகளில் புன்னகைகளை விற்று விடுகிறாய்.. எப்படி முடிகிறது உன்னால்...
  13. Admin 1

    அசகாய‌ பேரழகு🥰6

    பிறை நிலவாய் என்னை வளைத்து விட்டாய் இதழ் தேனை அள்ளி குடித்து விட்டாய் மெள்ள கிடத்தி மென்னுடல் புகுந்து விட்டாய் கருமேக மழையில் நனைத்து விட்டாய் கண்மூடி நானும்!! - சீக்ரட் அட்மாயர்😍 தேயன்😘
  14. Admin 1

    அசகாய‌ பேரழகு🥰5

    புல்லின் மீது விழுந்த பனித்துளியாய் நீண்டதே நம் முழு இரவும் இருள் விலகக் கண்டு நான் விலகியப் பின்னும் நீ படர்ந்திருந்தது மட்டும் நிழலாடுதே கண் முன் விடிந்தும் விலகாதப் பனித்துளியாய்!!! - சீக்ரட் அட்மாயர்😍 திரிலோ😘
  15. Admin 1

    அசகாய‌ பேரழகு🥰4

    எத்தனையோ உறவுகளைச் சந்தித்தப் போதிலும்.. எனக்கென வந்தவள் நீயொருவள் தானே.. உன்னுடன் கழித்தத் தருணங்களை வாய்மொழியால் சொல்லத் தெரியவில்லை.. பார்வை மொழியாலும் பதிலளிக்கத் தெரியவில்லை.. தினம் தினம் உன்னை காணும் ஒவ்வொரு நாளும்.. உனக்கே தெரியாமல் இன்பங்களை எனக்கு அள்ளி கொடுப்பாய்.. நீ என்...
  16. Admin 1

    அசகாய‌ பேரழகு🥰3

    நீண்ட கவிதையில் இடை இடையே தென்படும் ஹைக்கூவாய் அவள் மிதுனம் உரையாடல் நீடிக்கும் கதையில் மௌன சாட்சியாய் எடுப்பான அவளின் மந்தாரம் புதுக்கவிதையில் வரம்புமீறி வெளிப்படும் திமிராய் அவளின் எடுப்பான நெஞ்சுரம் மரபுக்கவிதையில் இதுவரை கண்டிராத இலக்கிய நயமாய் புணராத அவளின் கருமச்சம்...
  17. Admin 1

    அசகாய‌ பேரழகு🥰2

    என்னை ஏமாற்றி விட்டதாக அவன் அவனுக்குள் கெக்களிப்பதை அவன் விழிகள் எனக்கு உணர்த்துகின்றன.. ஆனால் அவைகளுக்கு எங்கே தெரியும்.. நான் நானாகவே.. ஏமாந்து கொண்டிருக்கிறேன் என்று.. என் "உதிரத்திற்காக"♥️'' - சீக்ரட் அட்மாயர்😍 கேடிக்கெல்லாம் கேடி ரசிகையின் கிறுக்கல்
  18. Admin 1

    அசகாய‌ பேரழகு🥰1

    சிறு பிள்ளையாய் அவளை பார்த்த என் நாட்கள் இன்று அவள் என் பிள்ளைக்கு தாயாய் .. குழந்தையை வயிற்றிலும் என்னை நெஞ்சினிலும் சுமந்தால் அந்த பேதை.. திங்கள் முகம் அவளின் அழகு முகம்.. அதிகபட்ச பயமும் அதிகபட்ச சந்தோஷமும் என்னுள்.. என்னவள் நெற்றியில் தீரா காதல் முத்தம் வளர் பிறையாய் தேறிந்த என்...
  19. Admin 1

    என் செல்லமே.‌.

    உன் சிகைத் தொட்ட துணியாய்... மார் படர்ந்த கச்சையாய்.. விழி தீண்டா நாணம் கண்டு உச்சி முகர்ந்து.. இதழொத்தி.. மடி சாய்ந்து கண் மூட.. தலை கோதி தூங்க வையடி என் செல்லமே.‌.
  20. Admin 1

    ஐஞ்சு நிமிஷம்

    ஐஞ்சு நிமிஷம்! இதொன்றே அவளின் வாசகம்! இறுக அணைக்க மாட்டாள்! முத்தம் கேட்க மாட்டாள்! காதல் சொல்ல மாட்டாள்! காமம் கொள்ள மாட்டாள்! செல்லங்கொஞ்ச மாட்டாள்! கெஞ்சி குலைய மாட்டாள்! தாய் சூட்டில் இளைப்பாறிடும் பிஞ்சாய் மாசற்ற நேசங்கொண்டு தூங்கிடுவாள்!
Top