What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
WhatsApp Image 2024-10-16 at 4.30.53 PM.jpeg

அத்தியாயம் 7

நிகழ்காலம்

நந்தமூரி சாமியார் ஆசிரமம்


சூரியன் மந்தநிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தான். அடைமழையின் அறுகுறியாய் வானம் அவ்வப்போது மின்னி மிளிர்ந்தது.

இருந்தும், மக்கள் கூட்டமோ மலை உச்சியை நோக்கி அலைமோதியது.

மலை உச்சி சாமியாரான நந்தமூரி சாமி, ஒரு மணி நேர சிறப்பு தரிசனம் வழங்குவதாய் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அறிவிப்புகள் ஆங்காங்கே செய்யப்பட்டிருந்தன.

அதே வேளை முதலில் வரும் நூறு பக்கதர்களுக்கு அவர் கையால் தீர்த்தமும் கிடைக்குமென்று கூடுதல் தகவல் ஒன்றும் எல்லா இடத்திலும் பரவியது.

ஆகவே, மனித ரூப கடவுள் என்ற பாணியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நந்தமூரி சாமியின் ஆசியை பெறவே, வானிலையை கூட பொருட்படுத்திடாது பக்தகோடிகள் அவரை காண பல மையில் தூரத்திலிருந்து வந்தனர்.

என்னதான் நேரடியான ஒரு மணி நேர பக்தர்கள் சந்திப்பென்றாலும், இடைவெளியாய் அதில் பதினைந்து நிமிடங்கள் சாமி ஓய்வெடுக்க ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆகவே, நந்தமூரி சாமி அவருக்கான அறைக்குள் நுழைந்து தோளிலிருந்த சால்வை கழட்டி ஓரம் போட்டப்படி வசதியாய் மஞ்சத்தில் சாய்ந்தமர்ந்தார்.

''வணக்கம் சாமி!''

என்றார்கள் ஒருசேர, அவருக்காகவே காத்திருந்த நான்கைந்து பேர் கொண்ட கூட்டம்.

''என்னாச்சு?! அந்த பொண்ணே கண்டுபுடிச்சாச்சா?!''

காட்டமாய் கேட்டார் சாமி.

''தேடிக்கிட்டுதான் இருக்கோம் சாமி! கண்ணுலையே சிக்க மாட்டறா!''

வந்திருந்த கூட்டத்தில் ஒருவன் தயக்கம் கொண்டு சொல்ல,

''டேய்! மூணு மாசமா இதையேத்தாண்டா சொல்லிக்கிட்டு இருக்கீங்க! எப்போதான் கண்டுபுடிச்சி தொலைவீங்க?!''

இடையில் கரம் இறுக்கி சாமி ஆவேசம் கொள்ள,

''நாங்க என்ன சாமி பண்றது?! எவ்ளோதான் நாங்களும் தேடறது! எங்கதான் இருக்காளோ அவே!''

அடுத்தவன் சளிப்பாய் சொல்ல,

''ஒருவேளை, வெளிநாட்டுக்கு எங்கையாவது ஓடி போயிட்டாளோ?!''

மற்றொருவன் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான்.

''அவே எங்க போயிருந்தாலும் சரி, எனக்கு அவே வேணும்! அவளே மட்டும் இன்னும் பத்து நாள்லே என் கண்ணு முன்னுக்கு கொண்டு வந்து நிப்பாட்டலே, நீங்க யாரும் உயிரோடவே இருக்க மாட்டிங்க!''

என்ற நந்தமூரி சாமியோ கப்பிலிருந்த வோட்காவை (vodka) கடகடவென தொண்டைக்குள் இறக்கி அறையிலிருந்து வெளியேறினார்.


**********************************

நிகழ்காலம்

வேதா படுக்கையறை


மஞ்சத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் சுடிதார் அணிந்திருந்த அட்சரா.

வெகுநாட்களுக்கு பிறகு அவளை அப்படி பார்த்த ஆளானால் அவன் பார்வைகளை சட்டென காரிகையிடமிருந்து விலக்கிட இயலவில்லை.

தடுமாறியவன் அவனுக்கான தலையணை மற்றும் போர்வையை எடுத்துக்கொண்டு,

''இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்க படுத்துக்கோங்க. நாளைக்கு அம்மா பக்கத்து ரூம் ரெடி பண்ணிடுவாங்க.''

என்றவன் அவளைக் கடந்து கதவை நோக்கி நடந்தவனாய்,

''டாக்டர் உங்களே தனியா விட வேணான்னு சொல்லிருக்காரு! அதனாலே, கதவை லோக் பண்ணிடாமே சாத்தி மட்டும் விட்டுடறேன்!''

என்றுச் சொல்லி, மூடியிருந்த கதவைத் திறக்க, அதுவரைக்குமே சிலை போல் உட்கார்ந்திருந்த தளிரியலோ அவனை ஏறெடுக்காது,

''ரஞ்சகன்!''

என்றாள் மென் குரலில்.

சடீரென நின்றன, முன்னோக்கி போன வேதாவின் அடிகள்.

''ரஞ்சகன்!''

என்று மீண்டும் சொன்ன மலரோ, கலங்கிய விழிகளோடு தலை தூக்கி அறைக்கு வெளியில் நின்றிருந்த ஆடவனை இமைக்காது நோக்கினாள் பாவமாய்.

வேதாவிற்கோ அந்நொடியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதயமோ பக் பக்கென்றது.

உள்ளுக்குள் பயம் ஒன்றோ திடிரென்று பரவிட, வாய் திறவாது நின்றான் ஆணவன் கோமகள் அவளை பார்த்தப்படியே.

''யார் 'ரஞ்சகன்' வேதா?! ஆமா, வேதா யாரு?! நீங்கதான் வேதாவா?!''

ஆமாம் என்று தலையாட்டினான் நாயகன் அவன்.

இமைகளை மூடித்திறந்தாள் முற்றிழை அவள். தேங்கியிருந்த கண்ணீரே வழிந்திறங்கியது வஞ்சியின் கன்னங்களில்.

''ரஞ்சகன், மட்டும்தான் ஞாபகத்துலே இருக்கு! வேறே என்ன யோசிச்சாலும் எதுவும் வரவோ, தோணவோ மாட்டுது!''

என்ற மாதங்கியோ அழுகையை விரல்களால் துடைத்துக் கொண்டு,

''நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே?!''

என்று பழைய புராணம் பாட,

''நான் வேதா! நீங்க அட்சரா! நீங்க என் தங்கை நிலாவோட பிரெண்ட்! நிலாவே பார்க்க வந்திருக்கீங்க! ஆனா, நிலா வெளிய போயிட்டா லேட்டா வருவா! அதனாலே, நீங்க இன்னைக்கு இங்கையே தூங்க போறீங்க!''

என்ற வேதாவோ, எப்படியும் என்ன சொன்னாலும் அது எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான் என்றுணர்ந்து கதையளந்தான் பேடை அவளிடம்.

''ஓஹ்! சரி! சரி!''

என்று மண்டையை ஆட்டிய அந்திகையோ, கிளம்பியவனை தடுத்து,

''இருங்க! நான் உங்க கார் குறுக்க வந்து விழுந்தேன்! நீங்க என்ன கையிலே தாங்கினீங்க! ட்ரீட்மெண்ட் அப்போ, நான் டாக்டர்கிட்ட ஊசி வேணான்னு சொன்னேன்! நர்ஸை கூட புடிச்சு தள்ளி விட்டேன்! சரிதானே?!''

என்ற அபலையோ தரை பார்த்து பேசி மீண்டும் கபாலத்தை மேல் தூக்க,

''ஹ்ம்ம்! டாக்டர் சொன்னாரு, நீங்க அவர் கொடுக்கறே மாத்திரைகளை சரியா எடுத்து, நல்லா தூங்கி எழுஞ்சாலே போதும், கூடிய சீக்கிரத்துலையே குணமாகிடுவீங்கன்னு! அதனாலே, ஞாபகத்துலே வர்றதை மட்டும் அப்படியே வெச்சுக்கிட்டு, வராததை விட்டு தள்ளிடுங்க!''

என்றவன் கதவை சாத்திட போக,

''வேதா!''

கைகளை பிசைந்தவளாய் எழுந்து நின்று,

''போகாதீங்க! பிளீஸ்! பயமா இருக்கு!''

என்றாள் வீங்கிய விழிப்படலங்களில் நீர் கோர்த்தவளாய்.

''நான் போய் அம்மாவே கூட்டிக்கிட்டு வறேன்!''

''இல்லே வேண்டாம்! வேறே யாரும் வேண்டாம்! நீங்க மட்டும் போதும்!''

என்றவள் மஞ்சத்தின் ஒருபக்கத்தை கை நீட்டி காண்பித்து,

''இங்க நீங்க படுத்துக்கோங்க, அங்க நான் படுத்துக்கறேன்! பிளீஸ்!''

''இல்லே, அட்சரா இது சரி வராது!''

''நேத்து மட்டும் சரி வந்ததா?! நான் இங்கையும், நீங்க அங்கையும்தானே படுத்திருந்தோம்!''

என்ற நேரிழையின் கூற்றில், சிறு அதிர்ச்சி கொண்ட வேதாவோ பேயறைந்தவன் கணக்காய் முழிக்க,

''நான் எழுஞ்சேன் பாதி மயக்கத்துலே! ஆனா, திரும்பவும் தூங்கிட்டேன்! அப்போ, பார்த்தேன்! நீங்க மூஞ்சே மறைச்சுக்கிட்டு குப்புறப்படுத்திருந்தீங்க!''

பூமகள் கொடுத்த ஆப்டேட்டில் வேறு வழியின்றி உதடுகளை ஈரமாக்கி கொண்ட ஆடவனோ, நெற்றியை விரல்களால் உரசி, மீண்டும் அறைக்குள்ளேயே நுழைந்தான்.

''நேத்து ஏதோ அசதியிலே நானும் உங்க பக்கத்துலேயே படுத்து தூங்கிட்டேன் போலே! ஆனா, இப்போ நல்ல தெளிவா இருக்கேன்! அதனாலே, நான் இங்க இப்படி, கீழே படுத்துக்கறேன்! நீங்க மேலையே படுத்துக்கோங்க! ஏதாவது வேணும்னா மட்டும் எழுப்புங்க!''

என்றவனோ தடுமனான விரிப்பு ஒன்றை பளிங்கில் விரித்து போட்டு அதில் சரிந்தான்.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 7
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top