What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உயிர் துஞ்சும் விரனா: 8

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 8

''விரன்..''

சிங் தாத்தா கனிவான குரலில் அழைத்து பேரனின் அறைக்குள் நுழைந்தார்.

குனித்திருந்த தலையை மேல் தூக்கி தாத்தாவை பார்த்த விரனோ ஏதும் பேசிடாது மீண்டும் தலையை திருப்பிக் கொண்டான்.

சிந்தையெல்லாம் சுந்தரியவள் எங்கே சென்றிருப்பாள் என்பதிலேயே உழன்றது.

''என்னடா ஆச்சு உங்களுக்குள்ளே..''

என்ற தாத்தாவின் கேள்விக்கு பேரனோ பதிலேதும் சொல்லாது அமைதி காத்தான்.

எப்படி சொல்லிடுவான் ஆணவன் அவன் நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கும் உண்மை அவனின் தம்பதியத்திற்கே வேட்டு வைத்து குடும்ப வாழ்க்கையையே சந்தி சிரிக்க வைத்திடுமென்று.

''குழந்தை தங்கறதுலே ஏதும் பிரச்சனையா என்னே..''

பட்டென கேட்டு விட்டார் தாத்தா அவனருகில் வந்தமர்ந்து பேரனின் பொஞ்சாதியவள் போன ஃபங்கஷனில் புருஷனின் பெயரை கப்பலேத்த.

''ம்ம்ச்ச்.. அதெல்லாம் ஒன்னுமில்லே தாத்தா..''

சமாளித்தான் விரன் அனைவரும் ஜோடிகளின் வீம்புக்கு அதுதான் காரணமென்று கருதிட.

''அப்பறம் என்னே பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்!! கல்யாணமாகி ரெண்டு வருஷமாக போகுது!! குழந்தை இல்லன்னா நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்கே!! நாமதான் அதை காதுலே வங்கிக்காமே கடந்து போணும்!!''

என்று தாத்தா ஹை ஸ்பீடில் போக,

''ஐயோ தாத்தா!!''

என்றவனோ தலையை இறுக்க தாத்தா சம்பந்தமில்லாமல் பேச,

''வாயே மூடு விரன்!! நாலு இடத்துக்கு போக வர பாக்கறவங்க கேட்கத்தான் செய்வாங்க நாமேதான் அப்போ இப்போன்னு சொல்லி சமாளிக்கணும்!! இல்லையா இருக்கறதே சொல்லி நடையே கட்டனும்!!''

என்றவரோ கொட்டி விட மூச்சு வாங்க மொத்தத்தையும்,

''தாத்தா.. நீங்க நினைக்கறே மாதிரி..''

என்ற மறுபடியும் தாத்தாவை நிறுத்த பார்த்தான் விரன்.

''வாயே மூடுன்னு சொல்லிட்டேன் விரன்!! இப்படி அடுத்தவங்க வீட்டுக்கு போயா உங்க பேரே நீங்களே கெடுத்துப்பிங்கே!! எதோ அது நம்ப வீட்டு பொண்ணுங்கறதுனாலே காதுங்காது வெச்ச மாதிரி உங்கம்மா பேசி ஏதோ எல்லாம் சமாளிச்சாச்சு!! இப்போ என்னான்னா அவளே காணோம்!! நீ என்னான்னா எனக்கென்னாங்கற மாதிரி இருக்கே!! என்னடா நடக்குது இங்கே!!''

தாத்தா எல்லாய் வெடிக்க,

''ஐயோ தாத்தா!! நீங்க நினைக்கறே மாதிரியெல்லாம் ஒன்னுமில்லே!! இது வேறே!!''

மடியிலிருந்த தலையணையில் முகம் புதைத்தான் விரன் தாத்தா கோக்கு மாக்காய் முடிச்சு போட்டு கண்டதையும் கற்பனை செய்து கொள்ள.

''என்னடா வேறே!! ஹான் என்னே வேறே!!''

என்ற தாத்தாவோ பேரனின் செவியை திருகியப்படி மேல் தூக்க,

''ஆர்ர்ஹ்ஹ்!! வலிக்குது தாத்தா!!''

என்றவனோ செல்ல ஊடல் கொள்ள தாத்தாவோடு,

''முடியே வெட்டாதன்னே கேட்கலே!! அந்த பொண்ணே கட்டாதன்னே கேட்கலே!! இப்போ அனுபவி நல்லா!!''

என்ற தாத்தாவோ தலையணையை அவன் நெஞ்சில் தூக்கியடிக்க,

''பேசாதீங்க தாத்தா!! எல்லாம் உங்களாலத்தான்!!''

என்றவனோ அதை தூக்கி ஓரம் போட்டான்.

''நான் என்னடா பண்ணேன்!!''

என்ற தாத்தாவோ அப்பாவியாய் கேட்க,

''நீங்க என்ன பண்ணலே!! பண்றதையெல்லாம் பண்ணிட்டு!! இப்போ பேச்சே பாரு!!''

என்றவனோ நிழலிகாவை அவன் கட்டிட தாத்தா மூலக்காரணமென்று ஞாபகப்படுத்தினான்.

''சரி அதையெல்லாம் விடு!! அதான் கட்டியாச்சு.. குடும்பம் நடத்தியாச்சு.. இன்னும் என்னே!! இப்போ பிரச்சனை என்னே அதை சொல்லு..''

தாத்தா வந்து நின்றார் மீண்டும் விட்ட இடத்திலேயே.

விரனுக்கோ ஐயோ என்றிருந்தது. உண்மையில் அவனுக்கு அழத்தான் தோன்றியது உள்ளுக்குள் புதைத்து வைத்திருக்கும் உண்மையை.

ஆனால், இது தெரியவந்தால் மற்றவர்களின் பார்வை அவன் மீது எப்படியிருக்கும் என்பதை நினைத்தே மன அழுத்தம் கொண்டான் ட்ரெனரவன்.

எப்படியாகினும் யாரிடமாவது ரகசியத்தை போட்டுடைத்துத்தானே ஆக வேண்டும். அப்போது தானே ஆணவனின் நெஞ்சம் நிம்மதி கொள்ளும்.

ஆகவே, பேசாது தாத்தாவிடமே நிஜத்தை சொல்லி அவனுக்கு உதவிட அவரையே வேண்டிட முடிவெடுத்தான் அவிரன் சிங்.

''விரன்!! என்னடா நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டு இருக்கேன்.. நீ என்னவோ ஒரு சிந்தனையிலே இருக்கே.. சொல்லு என்னே விஷயம்..''

தாத்தா துருவி துருவி கேட்க,

''அது.. அது வந்து தாத்தா..''

என்றிழுத்தான் விரன் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது.

''என்னடா.. சொல்லு..''

''தாத்தா..''

என்று தயங்கி ஆரம்பித்தவனின் போன் அந்நேரமென்று பார்த்து அலறியது.

''ஹலோ..''

''மச்சான் எங்க இருக்கே..''

மறுமுனையில் போலீஸ்காரன் ஹரன்.

''வீட்டுலதான்டா.. ஏன்.. என்னே விஷயம் சொல்லு..''

''நீ உடனே கிளம்பி என் வீட்டுக்கு வா மச்சான்.. இப்பவே வா.. லேட் பண்ணாதே..''

காவல்துறை அவசரப்படுத்தியது ட்ரெனரை.

''ஏன்டா மச்சான்.. என்னாச்சு..''

எழுந்தான் விரன் பைக் சாவியை கையிலெடுத்து,

''நீ முதல்லே வா.. அப்பறம் பேசிக்கலாம்..''

என்றவனோ ரிசீவரை வைத்தான்.

''யாரு போன்லே.. எங்க கிளம்பறே..''

பேரன் அரை பேண்டை கழட்டி ஜீன்ஸ் மாற்றிட வேள்வி கொண்டார் பெரியவர்.

''ஹரன்.. தாத்தா.. தெரியலே என்னாச்சுன்னு.. உடனே வீட்டுக்கு வான்னா..''

''டேய்.. உன் பொண்டாட்டியே காணோம்னு இங்க எல்லாம் தவிச்சு போய் கிடக்கறாங்க.. நீ என்னான்னா கொஞ்சுங்கூட அதை பத்தி கவலே படாமே ஹரனே பார்க்க கிளம்பறே..''

அரை கதவை திறந்தவனோ,

''நிழலிகா என்னே விட்டு போனதே எனக்கு நிம்மதிதான் தாத்தா.. நானா விரட்டத்தான் நினைச்சேன்.. இப்போ அவளாவே போயிட்டே.. வேண்டாதவளுக்காக நான் ஏன் வருத்தப்படணும்.. எல்லாரையும் அவுங்கவுங்க வேலையே பார்க்க சொல்லுங்க தாத்தா.. போனவே போனவளாவே இருக்கட்டும்.. யாரும் தேட வேண்டாம்!''

என்றவனோ மனதை கல்லாக்கிக் கொண்டு வார்த்தைகளை உதிர்த்தான் தாத்தாவின் முகம் பார்க்காது டோர் லாக்கை மட்டும் உள்ளங்கையால் இறுக்கி நெஞ்சம் வலிக்க.

மனசில் ஒன்றை வைத்து வாயால் வேறொன்றை பேசி செல்லும் பேரனை இமைக்காது வெறித்தார் சிங் தாத்தா. அவருக்கு தெரியும் பேரன் உள்ளுக்குள் எதையோ மறைக்கிறான் என்று. சொல்ல வந்தவன் பாதியில் வேறு நிறுத்தி விட்டான் போன் வர.

இனி எப்படி அவனிடமிருந்து சங்கதியை பிடுங்குவதென்று யோசித்திட ஆரம்பித்தார் வாழ்ந்து முடித்தவர்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top