What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

kunjari

  1. KD

    அத்தியாயம்: 58

    ️அத்தியாயம் 58 “மா! மா!” என்ற அலறலோடு தாயைத் தேடியபடி வாசலிலிருந்து வீட்டுக்குள் ஓடினான் ரீசன். “என்னடா?” என்ற அம்மாவின் கேள்விக்கு, “எங்கம்மா என் பைக்கு?” என்ற மகனோ லேசாய் பதட்டம் கொள்ள, “என்ன கிண்டலா? அப்போ அதுக்கு பேரு என்ன?” என்று முன் வாசலை எட்டி பார்த்த மம்மியோ மகனை முறைத்துச்...
  2. KD

    அத்தியாயம்: 57

    அத்தியாயம் 57 இதுவரை மயிலினியின் பழைய கதையை யாரும் கிண்டி கிளறியதில்லை. ஆனால், மொத்த குடும்பமும் அறியும் புதிய உறவுகளான அண்ணிகளை தவிர்த்து. மயிலினி சிறு வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறு பிஞ்சு. பணக்கார குடும்பம்தான் மயிலினியின் பூர்வீகம். இருப்பினும், குடிப்பழக்கம் கொண்ட தத்தியான...
  3. KD

    அத்தியாயம்: 56

    அத்தியாயம் 56 மந்தமான வானிலையில் சுரோத்தமன் ஒளிந்திருந்தான் கறுத்திருந்த மேகங்களுக்குள். ஒரே நேரத்தில் இரு உயிர்களை காவு வாங்கியிருந்தது குஞ்சரியின் அவசரமான முட்டாள்தனம். காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்து இரு நாட்கள் கடந்திருந்த வேளையில் கந்தல் கோலமாய் தலைவிரிக் கொண்டு வீட்டுக்குள்...
  4. KD

    அத்தியாயம்: 55

    அத்தியாயம் 55 இருள்வலி வந்தான். ஐயர் ஜெகநாதன் வீடோ விரிச்சோடி கிடந்தது. பெண்ணை காணாது அண்ணன்மார்கள் இருவரும் தீனவானன் மனை நோக்க, அங்கோ பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லி அனுப்பினர் குடும்பமே ஊருக்கு போய் பத்து நாட்களுக்கு மேலாகி விட்டதென்று தகவலை. மகளை பெற்றவரே நெஞ்சை பிடித்துக் கொண்டு...
  5. KD

    அத்தியாயம்: 54

    அத்தியாயம் 54 இதுவரையிலும் ஒரு ஓரத்தில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த விஜய் வந்தான் இருப்பெண்களையும் நோக்கி. ''விடு குஞ்சரி இவக்கிட்டலாம் போய் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு! இந்தா புடி நீ கேட்ட ஜூஸு!'' நீட்டினான் விஜய் ஆவேசங்கொண்டு நின்றிருந்த சண்டாளியின் முன். ஜூஸ் கிளாஸை கண்ட மாயோள்...
  6. KD

    அத்தியாயம்: 53

    அத்தியாயம் 53 விலோசனங்களை மெதுவாய் திறந்தாள் மயிலினி. புதியதோர் அறைக்குள் படுத்துக் கிடக்க டக்கென்று மஞ்சத்திலிருந்து எழுந்தவள் சுற்றி முற்றி விழிகளை ஓட விட்டாள். நாலாப்புறமும் சுவர்களே குடிக்கொண்டிருக்க கலர் கலரான சாயங்கள் கொண்ட அறையோ பெண்ணவளை பயமுறுத்தியது. ''மயிலினி..'' என்ற அழைப்போடு...
  7. KD

    அத்தியாயம்: 52

    அத்தியாயம் 52 காதலன் வருவான், வந்தழைத்து போவான் என்று காத்திருந்த மயிலினியின் முன்னாள் வந்து நின்றதென்னவோ குஞ்சரித்தான். வாய் பேசா மடந்தையின் ஜன்னலோரம் வந்த விஷமக்காரியோ வா போகலாம் என்று சைகையில் அழைக்க, ஏமாளி மயிலினியோ நிம்மதி பெருமூச்சுக் கொண்டாள் மச்சானின் காதலியே அவளைக் கூட்டிப்போக...
  8. KD

    அத்தியாயம்: 51

    அத்தியாயம் 51 தலைநகரில் குஞ்சரியின் காதல் பேயாட்டம் ஆட, கிராமத்திலோ ரீசன் குடும்பத்தோட குழலை போட்டுக் கொண்டிருந்தான். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் சின்னவனுக்கு விபத்து ஏற்படுவது போல பெற்றவர் கனவு காண, தகவலறிந்த பாட்டியோ குலதெய்வத்துக்கு நேர்த்திடக்கடன் செலுத்திட சொன்னார்...
  9. KD

    அத்தியாயம்: 50

    அத்தியாயம் 50 அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல காதலும் நஞ்சுதான். ரீசனின் மீது குஞ்சரிக் கொண்ட பைத்தியக்காரத்தனமான அன்பும் அப்படித்தான் கடிதத்தில் வரிக்கு வரி மயிலினி எழுதி வைத்திருந்த தீனா என்ற மூன்றெழுத்து வார்த்தை, தேவகுஞ்சரியின் தீனரீசன் என்று பெண்டு அவள் தவறாக புரிந்துக் கொண்டாள்...
  10. KD

    அத்தியாயம்: 49

    அத்தியாயம் 49 தீனா என்ற எழுத்திலேயே நின்றது செக் வைத்த குஞ்சரியின் விழிகள். மேற்கொண்டு கடிதத்தின் உள்ளடக்கத்தை படிக்காதவளோ மூச்சு விடும் சிலையாய் நின்ற இடத்திலேயே கொலு கொண்டாள் தீப்பிடித்தெறியும் மதுரையாய். வெறிக்கொண்டிருந்த நீலாம்பரிக்கு சகுனியாய் வந்தான் அவளுடன் படிக்கும் விஜய். ''என்ன...
  11. KD

    அத்தியாயம்: 48

    அத்தியாயம் 48 கொண்டாட்டம் இல்லா கல்லூரி ஏது. ரீசனின் காலேஜிலும் அப்படியான கோலாகலம் ஒன்று அரங்கேறியது பட்டமளிப்பு விழா என்ற பெயரில். அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் அக்கல்லூரியின் கீழ்நிலை கல்வி கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கும் தலைமை கல்லூரியில்தான் கான்வகேஷன். ஆகையால், ரீசனின்...
  12. KD

    அத்தியாயம்: 47

    அத்தியாயம் 47 தீனவானனின் மனதை அடித்து நொறுக்கிய மதங்கியோ ரொம்பவே சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுந்தரியாவாள். வீட்டின் மூன்றாவது பெண் வாரிசான அவளுக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் கல்யாணம் கட்டி கேனடா போயாயிற்று. ஐயர் குடும்பத்து அலரவளின் பெயரோ மயிலினி. ஒற்றை தாமரையவளை நல்ல ஆம்படையான் ஒருவனின்...
  13. KD

    அத்தியாயம்: 46

    அத்தியாயம் 46 ஒருவழியாய் சாந்தமாகியிருந்தாள் குஞ்சரி. அவளை அப்படியே நெஞ்சில் போட்டு தலைகோதியவனோ அவளின் இந்நிலையை கண்டு கவலைக் கொள்ளாமல் இல்லாமல். ''ரீசன்.. நான் தூங்கவா..'' இல்லத்தரசி அவள்தான் கேட்டாள். கணவனவனோ போர்வையை இழுத்து போர்த்தி மனைவியின் முதுகை தட்டினான் அருணியவள் தூங்கிட...
  14. KD

    அத்தியாயம்: 45

    அத்தியாயம் 45 விசா வீட்டை விட்டு வெளியேறிடும் முன் விஷத்தை கக்கியிருந்தாள் வார்த்தைகளால். செருப்பால் அடிக்காத குறையாய் குமரியவள் ரீசனை கோழை என்று முத்திரைக் குத்தி ஆணவனுக்கு சவால் விடும் கணக்காய் அவர்களுக்கிடையே நடந்த இரண்டாவது முயங்கலே பெண்ணவளின் இப்போதைய குழந்தைக்கு காரணமென்பதை ஆணவனால்...
  15. KD

    அத்தியாயம்: 44

    அத்தியாயம் 44 ஏசி அறையில் குளித்திருந்தாள் குஞ்சரி. டைரியின் முதல் பக்கமோ அச்சங்கொண்ட ஆயிழையை ஏளனமாய் பார்த்து சிரித்தது. ''கொலைகாரி! செத்திடு! பொய்க்காரி! செத்திடு! ரீசன் உனக்கில்லே! செத்திடு! வா! வந்து தூக்கு போட்டுக்கோ! வா! வா! சீக்கிரம் வா!'' அசரீரியாய் குரலொன்று கேட்டது கோமகளின்...
  16. KD

    அத்தியாயம்: 43

    அத்தியாயம் 43 மணி விடியற்காலை நான்கு முப்பத்தி இரண்டு. அப்படித்தான் காட்டியது மேஜை மீதிருந்த டிஜிட்டல் கடிகாரம். குளு குளு ஏசியில் நல்ல உறக்கம் ரீசனுக்கு. குஞ்சரியோ இமைக்காது கணவன் அவன் முகத்தையே பார்த்திருந்தாள். ஏறக்குறைய இருபது நிமிடங்களாகவே பொஞ்சாதியவள் காதல் மணாளனின் நித்திரை அழகை...
  17. KD

    அத்தியாயம்: 42

    அத்தியாயம் 42 சரியாய் இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. வந்த ஒரே வாரத்தில் கிளம்புவதாய் இருந்த ப்ரீதனோ புது தாய் விசாவிற்காக அவனின் பயணத்தை எக்ஸ்ட்ரா ஏழு நாட்கள் நீட்டிப்பு செய்திருந்தான். ''பார்ட்னர்.. நீங்க போய்தான் ஆகணுமா..'' என்றவளோ குழந்தையை மடியில் போட்டு தூங்க வைத்தப்படி கேட்க...
  18. KD

    அத்தியாயம்: 41

    அத்தியாயம் 41 குகப்ரீதன் முப்பத்தி மூன்று வயதான ஆண்மகன். விசாவிற்கும் அவனுக்கும் ஏறக்குறைய எட்டு பத்து வயது வித்தியாசம். பெரிய அழகனில்லை என்றாலும் பொத்தாம் பொதுவாக சொல்லலாம் ஓரளவுக்கு அழகென்று. பார்ப்போரின் பார்வையை பொறுத்து ஒருவரின் அழகு அவ்வளவே. பிடித்தவர்களுக்கு அவரவர் இணை என்னவோ...
  19. KD

    அத்தியாயம்: 40

    அத்தியாயம் 40 வெளியிலோ ஜோவென்ற மழை. குகப்ரீதனின் நெஞ்சில் துஞ்சிக் கிடந்தவளின் வல மார்போ கனக்க ஆரம்பித்தது. கூடவே, கொஞ்சமாய் வலி. சிணுங்கியவள் மெதுவாய் கண்கள் விழிக்க, விறலியின் தலையில் கையை வைத்தாற்படி ப்ரீதன் இன்னும் எழாமலே இருந்தான். ''பார்ட்னர்.. பார்ட்னர்..'' என்றவளின் குரல்...
  20. KD

    அத்தியாயம்: 39

    அத்தியாயம் 39 மணி விடியற்காலை ஐந்து ஆணவன் அவனுக்கான டேபிளில் அமர்ந்து மடிக்கணினியில் குடும்பம் நடத்த, விறலி விசாகாவோ மெதுவாய் அடிகள் வைத்து வந்து நின்றிருந்தாள் அவன் முன்னிலையில். முத்தத்திற்கான பஞ்சாயத்து ஒருவழியாய் முடிந்து போக எப்படியோ தூங்கிப் போயிருந்தாள் பேதையவள். இடியின் சத்தத்தில்...
Top