What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

reesan

  1. KD

    அத்தியாயம்: 120

    அத்தியாயம் நூற்றி இருபது மகள் கீத்துவின் உருவில் ரீசனையே கண்டது போல் பூரித்து போன குஞ்சரியோ, தெளிந்த நீரோடையாய் புத்துணர்வு கொண்டாள். அது அவனல்ல என்பதை சிந்தைக்குள் அழுத்தமாய் பதித்துக் கொண்ட காரிகையோ, மனப்பூர்வமாக கீத்துவை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தாள். தன்னம்பிக்கை கொண்டாள் குஞ்சரியவள்...
  2. KD

    அத்தியாயம்: 119

    அத்தியாயம் நூற்றி பத்தொன்பது ஒருவழியாய் வெளிநாடு போக சம்மதித்திருந்த கீத்துவோ கிளம்பும்முன் அவள் தாயோடு உறங்க விரும்பினாள். ஆகவே, அமரா அவர்களைத் தனியே விட்டு அவளுக்கென்ற அறையில் தஞ்சம் கொண்டாள். கீத்து பேக்கிங்ஸ் எல்லாம் முடிய குஞ்சரியின் அறைக்கு சென்றாள். “சீனியர்!” என்றழைத்த மகளோ கதவை லாக்...
  3. KD

    அத்தியாயம்: 118

    அத்தியாயம் நூற்றி பதினெட்டு கீத்துவின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட ப்ரீதனோ தீவிரமாய் யோசித்து நல்லதொரு முடிவை எடுத்திருந்தான். சித்தப்பா அவன் சம்பவத்தைப் பற்றி குஞ்சரியிடம் பேச, அவளோ அமராவை வர சொல்லி கேட்டாள். கொஞ்சமும் யோசிக்காத ப்ரீதனோ அக்காவிற்கு போனை போட, முன்பை போலில்லை குஞ்சரி என்றறிந்த...
  4. KD

    அத்தியாயம்: 117

    அத்தியாயம் நூற்றி பதினேழு குட்டி கீத்து வளர்ந்த ரீசனாகி நிற்க, ஹாக்கியின்பால் கொண்ட அதீத கவனம் குஞ்சரிக்கான நேரத்தைக் குறைத்தது. கொஞ்சநாட்கள் அம்மா, அவள் மகளுக்காய் காத்திருக்க விளையாடி வந்தவளோ, களைப்பில் தாயை மறந்து உறக்கம் கொண்டாள். சர்ஜரி சுந்தரியோ சாப்பாடு வேண்டாமென்று படுக்க...
  5. KD

    அத்தியாயம்: 116

    அத்தியாயம் நூற்றி பதினாறு ஒரே நாளில் ஆப்ரேஷன் நடந்து முடிய அறுவை சிகிச்சைக்குப் பின்னான முதல், இரண்டு வாரங்களுக்கு குஞ்சரி ரொம்பவே கஷ்டப்பட்டாள். தற்காலிகமான வலியையும் வீக்கத்தையும் எதிர்கொண்டவளுக்கு தீரா பிணியாகி போனது என்னவோ அந்த ஒற்றைத் தலைவலி மட்டுமே. ஆப்ரேஷன் முடித்தவளை மருத்துவர்...
  6. KD

    அத்தியாயம்: 115

    அத்தியாயம் நூற்றி பதினைந்து காரை பங்களாவின் வாசலில் பார்க் செய்து கீழிறங்கினாள் குஞ்சரி. கண நிமிட யோசனையில் நீண்டதொரு பெருமூச்சுக் கொண்டவள், முஷ்டி கரங்களை அழுத்தமாய் இறுக்கி ஆர்ப்பரித்த கண்ணீரைக் கண்டுக்காது தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள். ஒரு வருடம் பட்டாம்பூச்சியாய் பறந்து விட்டிருந்தது...
  7. KD

    அத்தியாயம்: 114

    அத்தியாயம் நூற்றி பதினான்கு நீ என்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பாா்த்துக் கொண்டே பிாிந்திருந்தோம் சோ்த்து வைக்க காத்திருந்தோம்... பாடல் வெளியிலிருந்து கேட்டது. பால்கனி விளிம்பினை வெறும் ஒருகையால் பற்றியபடி இயற்கைக்கு புறமுதுகு காண்பித்து...
  8. KD

    அத்தியாயம்: 113

    அத்தியாயம் நூற்றி பதிமூன்று சுற்றி ஆட்கள் இருந்தும் ரீசனில்லா குஞ்சரி அனாதையே... தனிமையில் தன்னவனை நினைத்துப் பெண்ணவள் கடத்திய நாட்கள், எத்துணை ரணமானதென்று இருந்ததை தொலைத்தவர்களால் மட்டுமே உணர முடியும். கீத்து என்னதான் வாய் நிறைய சீனியர் என்றழைத்து சேவகம் செய்தாலும், கணவன் கொண்ட காதலும்...
  9. KD

    அத்தியாயம்: 112

    அத்தியாயம் நூற்றி பனிரெண்டு என்றைக்கு அம்மணி குஞ்சரி இடைக்கு கீழ் முற்றும் துறந்தவள் ஆனாளோ, அன்றுத்தொட்டே மன்றாடி வேண்டினான் ரீசன், கட்டியவளை முதுகுத்தண்டு ஆப்ரேஷன் செய்ய சொல்லிக் கேட்டு. ஆனால், சண்டைக்காரியோ விசாவோடு கொண்ட சர்ச்சையில் முடியாதென்று அவனை அவளோடு இருத்திக் கொண்டாள். கோளாறு கொண்ட...
  10. KD

    அத்தியாயம்: 111

    அத்தியாயம் நூற்றி பதினொன்று “குஞ்சரி…” என்ற ப்ரீதனின் அழைப்பில் திரும்பிடாதவளோ பால்கனி கதவோரம் சென்று நிறுத்தினாள் அவளின் வீல்சேரை. பேபி சிட்டரோ கதவைச் சாத்திட குஞ்சரியோ பால்கனி திரைச்சீலையை ஓரந்தள்ளினாள். “ஸ்பைனல் கார்ட் இம்பிளான்ட் பண்ணிக்கோங்க.” என்றவன் சொல்ல மௌனியாக இருந்தவளின்...
  11. KD

    அத்தியாயம்: 110

    அத்தியாயம் நூற்றி பத்து முகம் பார்க்கும் கண்ணாடியில் வெறுமையான முகத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள் குஞ்சரி. தலையை சொந்தமாய் வாரிட அதென்னவோ மூன்று மாதங்கள் கடந்தும் ரீசன் பின்னலிடும் அளவுக்கு பக்குவமாய் எதுவும் வரவில்லை. அம்பாள் பக்கம் வந்தாலே குஞ்சரி அல்சேஷனுக்கு டஃப் கொடுக்க குட்டி...
  12. KD

    அத்தியாயம்: 109

    அத்தியாயம் நூற்றி ஒன்பது அசம்பாவிதங்கள் நினைவுகளாய் மாறியிருந்தாலும் விசா என்னவோ நிம்மதியின்றியே தவித்தாள் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு. ரீசன் அவன் உயிரை துறந்து இரு உயிரை காப்பாற்றியிருக்க உடலளவில் காரிகையவளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் மனதளவில் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தாள்...
  13. KD

    அத்தியாயம்: 108

    அத்தியாயம் நூற்றி எட்டு இரவு மணி பத்து. என்னதான் கண்கள் மூடிக்கிடந்தாலும் விசாவிற்கு ஒரு பொட்டு தூக்கம் விழிகளை எட்டிப் பார்த்திடவில்லை. கண்ணோரம் கண்ணீர் ஆர்ப்பரிக்க தலையணையை விரல்களால் அழுத்தி பற்றிப் பிடித்திருந்தாள் நகங்கள் அதில் புதைந்து போக பாவையவள். சொந்தமானவனின் வாசம் நாசி தீண்ட...
  14. KD

    அத்தியாயம்: 107

    அத்தியாயம் நூற்றி ஏழு நீளும் இரவு குஞ்சரிக்கு ஏக்கத்தை அதிகப்படுத்தியது. ரீசனின் நெஞ்சுக்குள் துஞ்சி கண்கள் மூடி துயில் கொள்ள மனம் கிடந்து தவித்தது. ரீசனை கல்லூரியில் ஜூனியராய் கண்ட நாள் தொடங்கி அவனை துரத்தி விரட்டி காதலித்த நாட்கள் எல்லாம் அம்பகங்களில் வலம் வர வஞ்சியின் வேதனையோடு கூடிய அழுகை...
  15. KD

    அத்தியாயம்: 106

    அத்தியாயம் நூற்றி ஆறு சாதாரண இறப்பென்றாலே கூறு போட சொல்லும் போலீஸ், கொலை வழக்கை சும்மாவா விடும். குத்திக் குதறியெடுத்து விட்டார்கள் ரீசனின் உடலை போஸ்ட் மார்ட்டம் என்ற பெயரில். குஞ்சரி எவ்வளவோ கெஞ்சினாள் கதறினாள். அவன் வலி தாங்க மாட்டான் என்றாள். ஆனால், நிஜத்தில் மரணித்தவனுக்கு உணர்ச்சிகள்...
  16. KD

    அத்தியாயம்: 105

    அத்தியாயம் 105 இறப்பென்பது சரீரத்துக்கு மட்டுமே சாத்தியப்பட்டதாகும். நாம் நம்மவர்களை மறக்கும் வரையில் அவர்களின் நினைவு நம்மில் இருக்கும் வரை அவர்களுக்கு என்றைக்குமே அழிவில்லை. இனிமையான பிறப்பு தனிமையான இறப்பு இதுவே வாழ்க்கை. ஒரேடியாய் போய் சேர்ந்தவனுக்கு இனி எவ்வித கவலையும் இல்லை. ஆனால்...
  17. KD

    அத்தியாயம்: 104

    அத்தியாயம் 104 மனம் விரும்பியவனை ஆசை ஆசையாய் காதலித்து கரம் பிடித்தவள் அவனின் நிழலை வேறொருத்தி கண்டால் கூட பார்த்தவளை சுட்டெரித்திடும் அளவிலான காதலைக் கொண்ட குஞ்சரிக்கோ முதல் முறை உள்ளுக்குள் அச்சம் நிலவியது. “ரீசன்! ரீசன்! என்ன பாருடா! டேய்! கண்ணத் திறடா!” என்ற குஞ்சரியோ கத்தினாள் கதறினாள்...
  18. KD

    அத்தியாயம்: 103

    அத்தியாயம் 103 களேபரம் கொண்ட அறையை நோக்கி வந்தாள் குஞ்சரி அவளின் நவீன வீல் சேர் கொண்டு. “ரீசன்!” என்றலறிய குஞ்சரியோ ரத்தமும் சகதியுமாய் உடலில் காயங்கள் கொண்டு மஞ்சத்தில் நின்றவனை பார்த்து வெம்பினாள். “ஆஹ்... ஹ்ஹ்... கு... குஞ்... ஆஹ்ஹ்...” என்ற ரீசனின் கால்களோ சடீரென்று வலுவிழந்து...
  19. KD

    அத்தியாயம்: 102

    அத்தியாயம் 102 மணி விடியற்காலை நான்கு முப்பது. சத்தம் போட்டது பேபி சீட்டரின் கைகடிகாரம். ஆணவன் வழக்கமாய் எழும் நேரமது. ஜிம்மெல்லாம் போகும் ரகமில்லை ப்ரீதன். இருந்தும் வீட்டிலேயே ட்ரெட்மில்லில் வேர்த்து விறுவிறுக்க ஓடிடுவான். ஆனால், கல்யாணமான கொஞ்ச நாட்களாகவே இந்த நான்கரை மணி அலாரம் என்னவோ...
  20. KD

    அத்தியாயம்: 101

    அத்தியாயம் 101 மணி நான்காக லேசாய் தூக்கம் கலைந்தது ப்ரீதனின் தம்பிராட்டிக்கு. மிழிகளை கசக்கி விழிகளை விரித்தவள் பக்கத்தில் பிக் பாஸை காணாது அறையைச் சுற்றி தேடினாள் தாலி கட்டியவனை. “ப்ரீதன்... ப்ரீதன்... வாஷ்ரூம்லையா இருக்கீங்க? ப்ரீதன்...” என்றவளோ அழைப்பின் ஊடே கணவனை ஏலம் போட்டும்...
Top